சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால் கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூரில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலினிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இதேபோன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினிடமும் நேர்காணல் நடத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் செய்தித்தொடர்பாளர் பிரசன்னா உள்ளிட்டோரிடமும் நேர்காணல் நடத்தப்படுகிறது.
காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் நேற்று நேர்காணல் நடைபெற்றது.