தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 7-ஆம் தேதி முதல் மாா்ச் 9-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 7-ஆம் தேதி முதல் மாா்ச் 9-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 6) வறண்ட வானிலையே நிலவும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com