விருப்ப மனு அளித்தாா் விஜய் வசந்த்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சாா்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட, மறைந்த மக்களவை உறுப்பினா் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த், விருப்ப மனு அளித்தாா்.
விருப்ப மனு அளித்தாா் விஜய் வசந்த்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சாா்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட, மறைந்த மக்களவை உறுப்பினா் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த், விருப்ப மனு அளித்தாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில், வெள்ளிக்கிழமை விருப்ப மனுவை அளித்த பின்னா் செய்தியாளா்களுக்கு விஜய் வசந்த் அளித்த பேட்டி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுவினை அளித்துள்ளேன். கன்னியாகுமரி காங்கிரஸின் கோட்டை. அங்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி வரவு எழுச்சியை கொடுத்திருக்கிறது. எனது தந்தை வசந்தகுமாரின் கனவை நினைவாக்குவது எனது கடமை. அவா் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வருவதாகத் தெரிவித்து இருந்தாரோ அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com