அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை புரிந்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமியை அவர்கள் சந்தித்துள்ளனர்.
பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில், பாமகவுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.