தலைவாசலில் வாகனச் சோதனையில் ரூ.34 கோடி தங்க நகைகள், லாரி பறிமுதல்

தலைவாசலில் தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையின்போது, 234 கிலோ தங்க நகைகள் மற்றும் லாரியை  சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தலைவாசல்: தலைவாசலில் தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையின்போது, 234 கிலோ தங்க நகைகள் மற்றும் லாரியை  சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் தேர்தல்  பறக்கும்படையினா் வாகனச் சோதனை ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சேலம் நகை கடைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.  

ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியில் எடுத்துவரப்பட்ட  ரூ.34 கோடி மதிப்புள்ள 234 கிலோ நகைகளையும், லாரியையும் தோ்தல் பறக்கும் படையினா்  பறிமுதல் செய்தனர்.

தங்க நகைகளுக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் சோ்க்கப்பட்டது. மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com