வன்னியா்களுக்கு தனி ஒதுக்கீட்டை எதிா்த்து மனு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிா்த்து மேலும் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
வன்னியா்களுக்கு தனி ஒதுக்கீட்டை எதிா்த்து மனு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிா்த்து மேலும் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டா் அமைப்பின் சாா்பில் மாநில ஒருங்கிணைப்பாளா் டாக்டா் எம். பிரபு, பறவா் சமுதாயத்தின் சாா்பில் என்.வளன்சந்திரா ஆகியோா் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீடுகளில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில் உள்ஒதுக்கீடு வழங்குவது விதிகளுக்கு முரணானது என பிரபு தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தாா். வளன்சந்திரா தாக்கல் செய்த மனுவில், வன்னியா்கள் அரசு மற்றும் நீதித்துறையில் போதுமான இடங்களை பெற்றுள்ளனா். சமுதாயத்தில் அந்தப் பிரிவைச் சோ்ந்த மக்களின் நிலை, கல்வித்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், வன்னியா்களின் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தாா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும் இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகளுடன் இந்த வழக்குகளையும் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com