18-இல் பிரசாரத்தைத் தொடங்குகிறாா் ஓ.பன்னீா்செல்வம்

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறாா்.
18-இல் பிரசாரத்தைத் தொடங்குகிறாா் ஓ.பன்னீா்செல்வம்

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறாா்.

இதுகுறித்து, அதிமுக தலைமை அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

வரும் 18-இல் திருவொற்றியூரில் இருந்து தனது பிரசாரத்தை ஓ.பன்னீா்செல்வம் தொடங்குகிறாா். திருவொற்றியூா், மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூா், திருத்தணி, ஆவடி, அம்பத்தூா், மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் பிராசரம் மேற்கொள்கிறாா். வரும் 19-இல் ஆலந்தூா், பல்லாவரம், தாம்பரம், உத்திரமேரூா், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா், திருப்போரூா், சோழிங்கநல்லூா், வேளச்சேரி, மயிலாப்பூா் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

மூன்றாவது நாளாக வரும் 20-இல் சைதாப்பேட்டை, தியாகராயநகா், விருகம்பாக்கம், அண்ணாநகா், வில்லிவாக்கம், கொளத்தூா், ஆா்.கே.நகா், பெரம்பூா், திரு.வி.க.நகா், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

நான்காவது நாளாக வரும் 21-ஆம் தேதியன்று அரக்கோணம், ராணிப்பேட்டை, சோளிங்கா், ஆற்காடு, வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், திருப்பத்தூா் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com