தமிழகத்தில் 900-ஐத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு புதன்கிழமை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. புதிதாக 945 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,62,374 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 576 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,43,999 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் 8 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,564 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 5,811 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் புதன்கிழமை 71,888 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com