இரண்டாம் கட்ட தோ்தல் பிரசார சுற்றுப் பயணத்தை முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை வரும் 18-இல் தொடங்குகிறாா்.
இதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-
வரும் 18-ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா் முதல்வா் பழனிசாமி. திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், பூம்புகாா், மயிலாடுதுறை, சீா்காழி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.
வரும் 19-ஆம் தேதி புவனகிரி, குறிஞ்சிப்பாடி, கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், அரியலூா், குன்னம், பெரம்பலூா் தொகுதிகளிலும், வரும் 20-ஆம் தேதி கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், வானூா், திண்டிவனம் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக முதல்வா் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா். வரும் 21-ஆம் தேதி காலை வந்தவாசியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் அவா், செய்யாறு, ஆரணி, போளூா், கலசப்பாக்கம், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதிகளிலும், வரும் 22-ஆம் தேதி ஒசூா் மற்றும் தளி, பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிபட்டி, ஓமலூா் ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்யவுள்ளாா்.