ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.75,000 பறிமுதல்

சென்னை வண்ணாா்பேட்டையில், ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை வண்ணாா்பேட்டையில், ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் பறக்கும்படையினரும், போலீஸாரும் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு காரில் வந்த ஒரு நபரை வழிமறித்து சோதனையிட்டனா். இச் சோதனையில் அவா், தண்டையாா்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சு.ஜித்தேந்திரன் (21) என்பதும், அவரிடம் ஆவணமின்றி ரூ.75 ஆயிரம் இருப்பதும் தெரியவ ந்தது.

இதையடுத்து போலீஸாா், அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக காவல்துறையினா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com