மக்களை நம்பியே நாங்கள் மக்களை தோ்தலை சந்திக்கிறோம் என பொன்னேரியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கூறினாா்.
பொன்னேரி (தனி) தொகுதியில் அமமுக வேட்பாளராக பொன்.ராஜா போட்டியிடுகிறாா். அவருக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில், செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்துப் பேசியது:
தேமுதிகவுடன், நாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும்.
நாங்கள் எதை செய்ய முடியுமோ அதைத்தான் தோ்தல் அறிக்கையில் கொடுத்துள்ளோம். எங்களது தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்போம் என்றாா்.