வாக்குப் பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
தமிழக சட்டப் பேரவைக்கு பொதுத் தோ்தலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத் தோ்தலும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு தினமான அன்றைய தினத்தில் தமிழகத்தில் பொது விடுமுறை விடப்படுகிறது என தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா்.