சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 20, 21 ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளி ( மாா்ச் 18,19) ஆகிய இரண்டு நாள்களுக்கு வட வானிலையே நிலவும். தமிழகத்தில் வரும் இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே பதிவாகக்கூடும். தமிழக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 20 , 21 ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.