கீழ்வேளூர் தொகுதி பாமக வேட்பாளரை மாற்றி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் 164. கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேத.முகுந்தன் மாற்றப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.