புதுச்சேரி: புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பாமக தனித்துப் போட்டியிடுகிறது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர்.
புதுச்சேரி பாமக அலுவலகத்தில் அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்த மாநில அமைப்பாளர் தன்ராஜ், செய்திகளிடம் கூறுகையில், புதுச்சேரி தேர்தல் துறை பாரபட்சமாக செயல்படுகிறது.
பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். பாமக போன்ற கட்சிகளை அவமதித்து, அலை கழிக்கின்றனர். புதுச்சேரியில் நேர்மையான தேர்தல் நடைபெறும் என்று சந்தேகமாக உள்ளது என்றார்.
இதனையடுத்து பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்யப் புறப்பட்டனர்.