பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகத்திற்கு வரவுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரப் பணிகளில் தேர்தல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்திலும் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மக்களை கவரும் வகையில், அவ்வபோது தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
அந்தவகையில், தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகத்திற்கு வரவுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பிரதமர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள இடங்கள் மற்றும் தேதிகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.