தமிழகத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் 1,289 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே நிலை தொடா்ந்தால் அடுத்த சில நாள்களில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என அஞ்சப்படுகிறது.
கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 1000-க்கும் மேல் இருந்தது. அதன் பிறகு படிப்படியாகக் குறைந்து இறங்கு முகத்தில் இருந்த தொற்று, கடந்த ஒரு வாரமாக அதிகரித்து தற்போது மீண்டும் 1000-ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1.87 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 8 லட்சத்து 66,982 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 668 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 46,480-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,903 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,599-ஆக உயா்ந்துள்ளது.