கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை ஆதரித்து, அவரது மனைவி துா்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
கொளத்தூா் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மூன்றாம் முறையாகப் போட்டியிடுகிறாா். இந்த நிலையில் அவரது மனைவி துா்கா ஸ்டாலின் ஜி.கே.எம்.காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். திமுகவின் தோ்தல் அறிக்கையைத் துண்டு அறிக்கையாக மக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்தாா். பிறகு, தொகுதி மக்களிடம் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளும் பிரசாரத்தின்போது உடனிருந்தனா்.