செந்துறை அருகே 3 சிறுவர்கள் ஓடை சேற்றில் சிக்கி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே 3 குழந்தைகள் ஓடை சேற்றில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தனர்.
மணப்பத்தூரில் நீரின் சேற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவர்கள் சுருதி, சுடர்விழி, ரோகித்.
மணப்பத்தூரில் நீரின் சேற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவர்கள் சுருதி, சுடர்விழி, ரோகித்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே 3 குழந்தைகள் ஓடை சேற்றில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தனர்.

செந்துறை அடுத்த மணப்பத்தூர் கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சுதாகர், ஜெயசீலன். சகோதரர்கள். இதில் சுதாகர் மகள் சுடர்விழி(7) மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 ஆம் வகுப்பும், ஜெயசீலன் மகள் சுருதி(10) குழுமூர் தனியார் பள்ளியிலும், ரோகித்(7) மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் மேற்கண்ட 3 குழந்தைகளும், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ளோர், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணவில்லை என அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கும் காணாததால், வீட்டின் அருகேயுள்ள சின்னஓடைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கியுள்ள நீர் மற்றும் சே 3 குழந்தைகளும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸôர், சடலங்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com