சேலத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 24) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். உடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.