சென்னை சௌகார்பேட்டையில் நகைக்கடை ஒன்றில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 24-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய வருமானவரித் துறை அதிகாரிகள், சென்னை சௌகார்பேட்டை யானைக்கவுனி என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தனியார் நகை கடையில், வியாழக்கிழமை நள்ளிரவில் முதல் சோதனை செய்தனர்.
சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.1 கோடியே 46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.