சென்னை: தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கடுமையாக உயர்ந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று (26- 03 -2021) கரோனா 1971 நபர்களுக்கு கண்டறியப்பட்டது. இது 25.03.2021 எண்ணிக்கையை விட 192 பேர் அதிகம். எனவே இந்நிலை தொடராமல் இருக்க கூட்ட நெரிசலினை தவிர்ப்போம் !!
முகக் கவசம் அணிவோம்!!
சமூக இடைவெளியினை கடைபிடிப்போம்!! என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டிருக்கும் வரைபடத்தில்,
மேலும், சுய கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை உறுதி செய்வோம், கரோனா பரவலை தடுப்போம் என்றும் வலியுறுத்தியுள்ளது.