தில்லி - கேரளம் - தமிழகம் - புதுச்சேரி: பிரதமரின் நாளைய முழுப் பயண விவரம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தில்லியிலிருந்து புறப்பட்டு கேரளம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தில்லியிலிருந்து புறப்பட்டு கேரளம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடியின் முழுப் பயண விவரம்:

  • தில்லியிலிருந்து தனி விமானம் மூலமாக செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணி அளவில் புறப்படும் பிரதமர் மோடி காலை 10.15 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். 
  • கோவையிலிருந்து காலை 10.20 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலமாக கேரள மாநிலம் பாலக்காட்டை 10.50 மணி அளவில் சென்றடைகிறார். அங்கு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. 
  • பிற்பகல் 12 மணி அளவில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.45 மணி அளவில் தாராபுரம் பொதுக்கூட்ட மேடைக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். சுமார் 55 நிமிடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.
  • இதன்பிறகு, பிற்பகல் 13.45 மணி அளவில் புறப்பட்டு 2.20 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். 
  • கோவையிலிருந்து தனி விமானத்தில் 2.25 மணி அளவில் புறப்பட்டு 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடைகிறார். 
  • பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து 3.35 மணி அளவில் புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com