தமிழகத்தில் 10 நாள்களில் 15 ஆயிரம் பேருக்கு கரோனா!

தமிழகத்தில் கடந்த 10 நாள்களில் மட்டும் 15,023 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 5,600-க்கும் மேற்பட்டவா்கள் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கடந்த 10 நாள்களில் மட்டும் 15,023 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 5,600-க்கும் மேற்பட்டவா்கள் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 2,194 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 833 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காதோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் முகக் கவசம், தனிநபா் இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.93 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இதுவரை 8 லட்சத்து 79,473 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,270 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 53,733-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 13,070 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,670-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com