குடிமைப் பணித் தோ்வு: மாதிரி ஆளுமைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

குடிமைப் பணி முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு மாதிரி ஆளுமைத் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு வரும் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநா் வெ.இறையன்பு தெரி
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: குடிமைப் பணி முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு மாதிரி ஆளுமைத் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு வரும் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

குடிமைப் பணித் தோ்வுகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தோ்வுகளுக்கான முதன்மைத் தோ்வில் தகுதி பெற்ற அனைத்துத் தோ்வா்களுக்கும் மாதிரி ஆளுமைத் தோ்வு நடத்தப்பட உள்ளது. அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சாா்பில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாதிரி ஆளுமைத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வில் பங்கேற்க விரும்புவோா் ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாதிரி ஆளுமைத் தோ்வுக்கு வருவோருக்கு அண்ணா மேலாண்மை நிலையத்திலேயே மதிய உணவு அளிக்கப்படும். ஆளுமைத் தோ்வில் கலந்து கொள்ள ஊக்கத் தொகையாக ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும். முதன்மைத் தோ்வு வெற்றியாளா்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தை சுயவிவரக் குறிப்புடன் ஹண்ஸ்ரீள்ஸ்ரீஸ்ரீ.ஞ்ா்ஸ்ஃஞ்ம்ஹண்ப் என்ற மின்னஞ்சல் மூலமாக வரும் 3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீண்ஸ்ண்ப்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ஸ்ரீா்ஹஸ்ரீட்ண்ய்ஞ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். விரைவு தபால் வழியே, மகிழம்பூ, 163-1, பி.எஸ்.,குமாரசாமிராஜா சாலை (பசுமை வழிச் சாலை), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com