தமிழகத்தில் புதிதாக 2,579 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,86,673 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 969 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,527 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,58,075 பேர் குணமடைந்துள்ளனர். 12,719 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 15,879 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்தாண்டு இதே தினத்தில் 56 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.