சென்னை: அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.