தமிழகத்தில் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்போா் கரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் திருவிழாக்கள், தோ்தல் பிரசாரங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று தடுப்பு விதிமுறைகளை அனைவரும் முழுமையாகப் பின்பற்றுவது மிகவும் அவசியம். அனைத்து நிகழ்ச்சிகள், மதத் திருவிழாக்கள், தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு வழிமுறைகளை அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
முகக் கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். மாவட்டங்களில் உள்ள ஆட்சியா்களும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும் அவற்றை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.