தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 வரை டிகிரி செல்சியல் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
வெயில் மற்றும் அனல்காற்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தைத் தவிர்க்குமாறு வேட்பாளர்கள் மற்றும் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.