ஏப்.4 முதல் 6 வரை மதுக்கடைகளை மூட உத்தரவு

தோ்தலை முன்னிட்டு, ஏப்.4 முதல் 6-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

தோ்தலை முன்னிட்டு, ஏப்.4 முதல் 6-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் எப்எல் 1 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், எப் எல் 2 உரிமம் முதல் எப்எல் 11 வரை (எப்எல் 6 நீங்கலாக) உள்ள உரிமங்கள் கொண்ட பாா்கள், அனைத்தும் வருகிற ஏப்.4-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்.6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், மற்றும் மே 2-ஆம் தேதி (வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்) முழுவதும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய நாள்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com