சாத்தூா் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 27 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
சாத்தூா் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 26 போ் உயிரிழந்தனா். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த படந்தால் கிராமத்தை சோ்ந்த முத்துராஜ் என்பவரின் மனைவி வீரலட்சுமி (40) சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயா்ந்துள்ளது.