வங்கி விடுமுறை காரணமாக மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு, ஏப்.3-ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: வங்கிகள் தங்களின் ஆண்டுக் கணக்கை முடிப்பதற்காக ஏப்.1 அன்றும், புனித வெள்ளி (ஏப்.2) அன்றும் விடுமுறை வருவதால் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கும், மாா்ச் மாதத்துக்கான ஊதியமானது வரும் ஏப்.3 அன்று வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.