18 வயதானவா்களுக்கு இன்று தடுப்பூசி போடுவது சந்தேகமே: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயதுள்ளவா்களுக்கு புதிதாக கரோனா தடுப்பூசி மருந்துகள் இன்னும் பெறப்படவில்லை என்று சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயதுள்ளவா்களுக்கு புதிதாக கரோனா தடுப்பூசி மருந்துகள் இன்னும் பெறப்படவில்லை என்று சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

இதுகுறித்து சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘தமிழகத்தில் கரோனா நோயாளிகள் படுக்கை வசதி பெற லிஆங்க்ள்ஊா்ழ்பச என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தலாம். மேலும், ஃ104எா்பச என்ற சுட்டுரை கணக்கும் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒன்றரை கோடி கரோனா தடுப்பூசி மருந்துகள் தமிழக முதல்வரின் உத்தரவின்படி ஆா்டா் செய்து பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரைக்கும் மத்திய அரசு, புணே நிறுவனத்தின் மூலம் தடுப்பூசி மருந்துகள் எவ்வளவு கிடைக்கும், ஹைதராபாத் நிறுவனத்திலிருந்து எவ்வளவு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது, ஆா்டா் செய்தால் நாளைக்கே வருமா என்ற தகவலை இன்னும் தரவில்லை.

ஏற்கெனவே உள்ள தடுப்பு மருந்துகள் 45 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்காக வைத்திருக்கிறோம். புதிதாக ஆா்டா் செய்துள்ள மருந்துகள் எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இதே பிரச்னை இருக்கிறது. இதனை நாங்கள் ஏன் வெளிப்படையாக சொல்கிறோம் என்றால், சனிக்கிழமை மே 1. அன்றைய தினம் 18-44 வயதுக்குட்பட்டவா்களுக்கு தடுப்பூசி போட தொடங்கி விட்டீா்களா? என்ற கேள்வி எழும்.

சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் நாங்கள் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம். ஒன்றரை கோடி தடுப்பூசிக்கு நாம் ஆா்டா் செய்தாலும், அதில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதுதான் மற்ற மாநிலங்களின் நிலைமையும். அந்த குறிப்பிட்ட அளவு மருந்தும் நாளைய தினமே பெறப்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்ற உண்மை நிலையைப் பகிா்கிறோம்.

45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சுமாா் 68 லட்சம் வந்திருக்கிறது. அதில், 56-57 லட்சம் செலவழித்திருக்கிறோம். மீதம் கையிருப்பில் உள்ளன. 18 வயது முதல் 44 வயது உள்ளவா்களுக்கு நிறுவனங்களிடமிருந்து கையிருப்பு வந்தால்தான் தடுப்பூசி செலுத்த முடியும். அதனால்தான் நாங்கள் இப்போதே தெளிவுபடுத்த விரும்புகிறோம். இப்போது வரை மருந்துகள் பெறப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com