கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன் கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 2013-ல் டிஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.