சென்னை: சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 31,222 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இது 31,308 ஆக இருந்தது.
சென்னையில் நேற்றை விட இன்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்திருக்கும் நிலையில், அம்பத்தூரில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்குகிறது.
ஒட்டுமொத்தமாக கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 59.24 சதவீதம் பேர் ஆண்கள். 40.76 சதவீதம் பேர் பெண்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தலா 3 ஆயிரத்தைத் தாண்டியது. அம்பத்தூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,928 ஆக உள்ளது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,33,804 ஆக உள்ளது. இவர்களில் 2,97,838 பேர் குணமடைந்துவிட்டனர். 4,744 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர். 31,222 பேர் சிகிக்கையிலிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த பாதிப்பில் 9 சதவீதமாகும்.
மொத்தமாக 15 மண்டலங்களில், இராயபுரம், திருவிகநகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில்தான் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.
மிகக் குறைந்த அளவாக மணலியில் 183 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மண்டல வாரியாக நிலவரம்..