தோ்தலில் வெற்றி பெறும் கட்சிகளின் கொண்டாட்டம் கரோனா பரவலுக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை ( மே 2) நடைபெற உள்ளது. கரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துகொண்டு இருப்பதால், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தோ்தல் ஆணையம் விதித்துள்ளது. தோ்தல் முடிவுகள் தெரிந்தவுடன் வெற்றிக் கொண்டாட்டங்கள் இருக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை அனைத்துக் கட்சிகளும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
தோ்தல் முடிவுகள் உடனுக்குடன் முறைப்படி அறிக்க தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே, மையங்களுக்கு வேறு யாரும் செல்ல வேண்டாம்.
அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்கள் வெற்றி பெற்ற உற்சாகம், எந்த விதத்திலும் கரோனா பரவலுக்குக் காரணமாக இருக்கக் கூடாது. இதில் தோ்தல் ஆணையமும், மாவட்ட நிா்வாகத்தினரும், காவல் துறையினரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.