பள்ளிக் கல்வித் துறை செயலாளா் பொறுப்பு, உயா் கல்வித் துறை செயலாளா் அபூா்வாவிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்தாா். அதன் விவரம்:
உயா்கல்வித் துறைச் செயலாளரான அபூா்வா, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளா் பொறுப்பை கூடுதலாக வகிப்பாா் என்று தனது உத்தரவில் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா்.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, பள்ளிக் கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த தீரஜ்குமாா், விடுப்பில் சென்ற காரணத்தால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.