பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சனுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
தமிழக அரசின் பொதுமுடக்க அறிவிப்பால், சுற்றுலா தொழில், வணிக வளாகங்களில் உள்ள கடைகள், முடிதிருத்தும் தொழிலாளா்கள், உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், நாடகம், கூத்து உள்ளிட்ட கிராமிய கலைஞா்கள், இசைக்கலைஞா்கள், திரையரங்க தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே அரசின் பொதுமுடக்க அறிவிப்பால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரண உதவியாக மாதம்தோறும் ரூ.7,500-ஐ உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.