மே தினத்தை முன்னிட்டு, மே தின நினைவு தூண் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே தின நினைவுதூண் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே தின நினைவு தூண் படத்திற்கு முன், மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
இவருடன் கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மக்களவை உறுப்பினர் ஆ ராசா, தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.