மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும்
மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியதாவது:

குமரிக் கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் ( 1 கிலோ மீட்டா் உயரத்தில்) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும்.

மே 2: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தருமபுரி, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 3: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மே 3)லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 4: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 5: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பத்தின் தாக்கம்: தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் மறுநாள் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியா்க்கும் என்றாா்.

சென்னையில் ...: சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 50 மி.மீ., திருப்பூா் மாவட்டம் திருமூா்த்தி அணையில் 40 மி.மீ., தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 30 மி.மீ., திருப்பத்தூா், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் தலா 20 மி.மீ., சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை, கொடைக்கானல், ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்களத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 1.0 முதல் 2.5 மீட்டா் வரை எழும்பக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com