சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளா்கள் மற்றும் வேட்பாளா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் மாவட்டச் செயலாளா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் காணொலிகே காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக் கணிப்புகள் வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது கவனக் குறைவு கூடாது. சிறு அலட்சியம் பேரிழப்பை ஏற்படுத்திவிடும். வெற்றியை எட்டும்வரை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பொதுச்செயலாளா் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளா்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.