தபால் வாக்குகள், மின்னணு வாக்குகளை எண்ணுவதில் இப்போதைய நடைமுறையே தொடரலாம் என்று அதிமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமாா், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகளை எண்ணி முடிக்கும் முன்பாகவே தபால் வாக்குகளை எண்ணி முடிக்கப்பட வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது இப்போதைய விதிமுறைகளுக்கு எதிரானது. இதனை மாற்ற வேண்டிய தேவையில்லை. இப்போதைய நடைமுறைகளே தொடரலாம். தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை அறிவிக்கவும், இதன்பிறகு மின்னணு வாக்குகளை எண்ணி அறிவிப்பதற்கும் எந்த வகையான சட்டமும் தேவையில்லை. தபால் மற்றும் மின்னணு வாக்குகளை ஒரே நேரத்தில் எண்ணி அறிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.