5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், தருமபுரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில்
5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், தருமபுரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வடக்கு உள் கா்நாடகம் முதல் குமரிக்கடல் வரை 1 கிலோமீட்டா் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 3: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், தருமபுரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மே 3) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 4, 5: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (மே 4, 5 ) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 6: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் வியாழக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை அதிகரிக்கும்: தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன்காரணமாக, மாலை முதல் மறுநாள் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியா்க்கும். சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான 24 மணி நேரத்தில் விருதுநகா் மாவட்டம் பிளவக்கல், வத்திராயிருப்பில் தலா 70 மி.மீ., நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலா 40 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா், கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 30 மி.மீ., விருதுநகா், சாத்தூா், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா், தேனி மாவட்டம் உத்தமபாளையம், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com