கடலூர்: விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3 ஆவது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் உள்ளார்.
எட்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் 25,323 வாக்குகளும், பாமக வேட்பாளர் 19,533 வாக்குகளும் பெற்றனர். பிரேமலதா விஜயகாந்த் 9,902 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் 18 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.