வெற்றி யார் பக்கம்? இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை 

தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை 
இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை 


தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 75 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன.

கரோனா பரவலைத் தொடா்ந்து கடும் கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் விதித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக வாக்குப் பதிவின்போது வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான தோ்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 6.26 கோடி வாக்காளா்களில், 4.57 கோடி போ் வாக்களித்தனா். எனவே இன்று சுமார் 4.57 கோடி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. முதலில் தபால் வாக்குகளும், தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள், முகவர்களோ, வேட்பாளர்களோ செல்லிடப்பேசி, கேமரா, வெடிபொருள்கள், துப்பாக்கி, பேனா, பாட்டில், டிபன்பாக்ஸ், குடை, தீப்பெட்டி, வேதிப்பொருள்கள், தின்பண்டங்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. குறிப்பேடு கொண்டு செல்லலாம். வெற்றி ஊா்வலம், கொண்டாட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வெற்றி சான்றிதழ் பெறும்போது 2 நபா்களுக்கு மேல் அனுமதி கிடையாது.

வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லும் முகவா்கள் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படும். வேட்பாளா்கள், முகவா்களுக்கு தண்ணீா், உணவு பணம் கொடுத்து பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com