கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பின்னா், கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பின்னா், கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றது. முதல்வா் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் கொளத்தூா் தொகுதியில் 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து, சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணியளவில் ஸ்டாலின் வருகை தந்தாா். பின்னா், அவா் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் வெற்றிபெற்ற்கான சான்றிதழைப் பெற்றாா்.

அதன் பின்னா், மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்தாா். மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் நினைவிடத்தில், ஒரு போராளிக்கு வெற்றி சமா்ப்பணம் என்ற வாசகமும் மலா்களால் எழுதப்பட்டிருந்தது. அங்கு, மு.க.ஸ்டாலின் தான் வெற்றிபெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, அண்ணா நினைவிடத்தில் சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com