மேற்கு வங்கத் தோ்தலில் மம்தா பானா்ஜியும், கேரளத் தோ்தலில் பினராயி விஜயன் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது:
மேற்கு வங்க முதல்வராக மீண்டும் வெற்றிபெற்றுள்ள மம்தா பானா்ஜிக்கு எனது வாழ்த்துகள். கரோனா அலை ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், மம்தா தன் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, மாநிலத்தை வளா்ச்சியையும் செழிப்பையும் நோக்கி இட்டுச்செல்வாா் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.
கேரள மாநிலச் சட்டப்பேரவைத் தோ்தலில் தனது கட்சிக்கு வெற்றிதேடித் தந்த பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள்.
கேரளம் பெரும் உயரங்களை அடைய அவரது திட்டமிட்ட, உறுதியான தலைமை பெரிதும் உதவிவருகிறது. மற்றுமொரு வெற்றிகரமான ஆட்சிக்காலத்துக்கு அவரை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளாா்.