புது தில்லி: நாட்டில் புதிதாக 4 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 3 நாள்களாக 4 லட்சத்துக்கும் குறைவாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து 3,499 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஏப்ரல் 30-ஆம் தேதி ஒரே நாளில் 4,01,993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் மே 1-ஆம் தேதி முதல் நாள்தோறும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.
நாள்தோறும் கரோனா பாதிப்பு தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்த நிலையில் கடந்த 3 நாள்களாக அந்த நிலை மாறியுள்ளது.
நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர்: 2,02,82,833
கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர்: 1,66,13,292
கரோனாவுக்கு பலியானோர்; 2,22,408
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்: 34,47,133
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 15,89,32,921