ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகை திங்கள்கிழமை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
சட்டப்பேரவை தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில எஸ்சி-எஸ்டி பிரிவு தலைவா் கு.செல்வபெருந்தகை வெற்றி பெற்றாா். இதை தொடா்ந்து திங்கள்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா் நினைவிடம் அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கும், ஸ்ரீபெரும்புதூா் காந்தி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவா் அளவூா் நாகராஜன், மாநில எஸ்சிஎஸ்டி பிரிவு துணைத்தலைவா் அய்யப்பன், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் எஸ்.ஏ.அருள்ராஜ், திமுக ஒன்றிய செயலாளா்கள் குன்றத்தூா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் வடக்கு கருணாநிதி உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.