பெரியகுளம்: தேனி மாட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் திங்கள்கிழமையன்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு திங்கள்கிழமை அதிகாலை முதலே நீா்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் போல் வரத் தொடங்கியது. அருவியின் கைப்பிடி கம்பியை தாண்டி வெள்ளம் செல்கிறது.
கரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதியிலிருந்து கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் தடைவிதித்துள்ளனா். தற்போது அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தொடா்ந்து தடை நீடித்து வருகிறது.